பராமரிப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (செப்ரெம்பர் 14) வியாழக்கிழமை மின் தடை ஏற்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் – தோப்புக்காடு, ஊரி, களபூமி – பாலக்காடு அம்மன் கோயிலடி, காரைநகர் இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலகம், காரைநகர் சீனோர் படகுத்துறை, காரைநகர் கடற்படைத்தளம், காரைநகர் கடற்படை முகாம் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.