North

10 வயதுச் சிறுமி வன்புணர்ந்து கொலை! – தலைமன்னாரில் நடந்த கொடூரம்!

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது.

மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்துவந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார் .

அவர் வசித்த இடத்துக்கு அருகில் இருக்கும் தாய் ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

வீடியோ வடிவச் செய்திக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

சந்தேக நபர் நேற்று மாலை உணவு வழங்கும் தாயின் பேத்தியான சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

அருகில் இருந்த பாதுகாப்புக் கமராக்களின் உதவியுடனும், ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தலைமன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது போன்ற அவலம் இலங்கையில் அதிகரித்து வருகின்றது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 10,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர்கள் எதிர்கால இலங்கையின் தூண்கள். அவர்களின் பாதுகாப்பு என்பது நிச்சயம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.

Related Posts